الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ
يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
சிலர்களின் முயற்சி இவ்வுலக
வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக
எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (18:104)
நமது மார்க்கமான தீனுல் இஸ்லாம்
மிக உயர்ந்த, சங்கையான, சிறந்த, கண்ணியமான, மார்க்கம். இன்னும்
புகழுக்கு என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ அவை எல்லா வார்த்தைகளையும்
சொல்லி புகழ்ந்தாலும் புகழ்ந்து விட முடியாத அளவுக்கு மிக உயர்வான மார்க்கம்.
இதை முஸ்லிம்களான நாம் சொல்லி
புகழ்ந்து கொண்டு பெருமை அடிக்கவில்லை உலகின் பிரபல்யமான அறிவாளிகளும், உலக புகழ் பெற்ற விஞ்ஞானிகலும் சொல்லும் வார்த்தை இது.
எனவே மிக தூய மார்க்கத்திற்கு
சொந்தகாரர்களான நம் பார்வையில் இஸ்லாம் எப்படி இருக்கிறது!
பெருமானாருடைய ஹஜ்ஜதுல் விதாவின்
உரையில் "அறியாமை காலத்தில் செய்த செயல்களை என் காலுக்கு கீழ் போட்டு புதைத்து விட்டேன் இனி கியாமத் வரை தூய இஸ்லாத்தை
அதன் தூய வழியில் பின்பற்ற வேண்டும்"என்ற நாயகத்தின் போதனை நம்முடைய
காதுகளில் மிக துல்லியமாக கேட்டு கொண்டிருக்க நம்மில் சிலர் அல்லாஹ்வும் ரஸுலும்
சொல்லாத செயல்களை மார்க்கம் என்று செய்வது எவ்வளவு பெரும் குற்றம்.அதிலும்
குறிப்பாக அல்லாஹ்வும் ரஸுலும் ஹராம் என்று தடுத்ததை அமல் என்று செய்வது எவளவு
பெரும் பாவம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
பெருமானார் நம் மார்க்கத்தை
அறிமுகபடுத்துவதற்கு முன் மூட நம்பிக்கைகளில் மக்கள் மூழ்கியிருந்தார்கள் நாயகம்
நம் மார்க்கத்தின் மூலம் அவர்களை சீராக்கினார்கள்.
ஹஜ்ஜிக்காக இஹ்ராம் கட்டி வீட்டை
விட்டு வெளியேறிய பிறகு எதாவது தேவைகாக வீட்டுக்கு செல்ல நேரிட்டால் வீட்டின் முன்
வாசல் வழியாக செல்லாமல் பின்வாசல் வழியாக செல்வார்கள். ஏன் ?இஹ்ராம் கட்டி வெளியேறிய பிறகு முன்வாசல் வழியாக
சென்றால் இஹ்ராமின் நன்மை கிடைக்காது என்ற மூட நம்பிக்கையினால் அப்படி செய்தார்கள்.
அந்த மூட நம்பிக்கையை அல்லாஹ் இறை
வசனத்தின் மூலம் தெளிவு படுத்தினான்.
முஃமின்களே! உங்கள் வீடுகளுக்கு பின் புறமாக வருவதில்
புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால்
இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே
செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும்
பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி
நடந்து கொள்ளுங்கள்.(2:189)
இந்த வசனம் மூட
நம்பிக்கைகளின் மூலம் நமக்கு நன்மை ஏதும் கிடைக்காது அல்லாஹ்வை அஞ்சுவதின்
மூலம்தான் நன்மைகள் கிடைக்கும் என்று நமக்கு உணர்த்துகிறது
பெருமானார் ஒரு ஹதீஸிலே
எந்த வித அப்பழுகில்லாத மிக தூய மார்க்கத்தில் நான் உங்களை விட்டு செல்கிறேன்
என்றார்கள்.
அப்படியானால் நம்
மார்கத்தில் உள்ள விஷயங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டியது மிக அவசியமாகும்.
வேதனை என்னவென்றால்
நம்மில் சிலர் சில அனாச்சாரங்களை மார்க்கம் என்று செய்கிறார்கள். இபாதத் என்றும், அமல் என்றும் நினைத்து கொண்டு மூட பழக்கங்களில்
தன்னை ஈடுபடுத்திகொள்கிறார்கள்.
இவர்களை பார்த்து ஒரு
வசனத்திலே அல்லாஹ் الَّذِينَ
ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ
صُنْعًاசிலர்களின்
முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே
அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (18:104)
இன்னொரு வசனத்தில் أَفَمَن
زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا எவனுக்கு அவனுடைய
செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் நேர்வழி பெற்றவனைப்
போலாவானா?(35:8)
இந்த இரு வசனங்களும்
நமக்கு சொல்லி தரும் பாடம் என்ன? அல்லாஹ்வும், ரசூலும் நமக்கு எதை வழி காட்டினார்களோ,சத்திய சஹாபாக்கள் நமக்கு வாழ்க்கை நெறியாக எதை
வாழ்ந்து காட்டினார்களோ, கண்ணியம்
நிறைந்த இமாம்கள் நமக்கு மார்க்கம் என்று எதை வகுத்து கொடுத்தார்களோ அதில் மட்டும்
தான் வெற்றி உள்ளது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்று எத்தனை
அனாச்சாரங்கள்,
மூட நம்பிக்கைள், சகுனம் பார்த்தல்,நல்ல நேரங்கள்,கேட்ட நேரங்கள் பார்த்தல்,ஜாதகம், ஜோஷியம் பார்த்தல், வாஸ்து பார்த்தல் இப்படி மார்கத்திற்கு முரணான
விஷயங்களில் மக்கள் மூழ்கி இருக்கிறார்கள். எந்த இமாம்கள் இவைளை ஒழிக்க வந்தார்களோ
அவர்களின் பெயரிலேயே ஒரு மூட நம்பிக்கை வணக்கம் ஹழ்ரத் ஜாபர் (ரஹ்) அவர்களின் பெயரில்
பூரியான் பாத்திஹா!இப்படி மார்க்கத்தில் இல்லாததை இபாதத் என்று செய்பவர்கள் மேலே
கூறப்பட்ட இரண்டு வசனங்களையும் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நம் மார்க்கத்தில் ஒரு
குழந்தை பிறந்தது முதல் ஒரு மனிதனை கப்ரில் கொண்டு வைக்கும் வரை என்ன,என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவு படுத்த
பட்டிருக்கிறது அதையெல்லாம் விட்டு,விட்டு
தேவையில்லாத மூட நம்பிக்கையில் மூழ்கியிருப்பது எவ்வளவு பெரும் அறியாமை என்பதை உணர
வேண்டும்.
பெருமானார் நாளை
மறுமையிலே ஹவ்லுல் கவ்சர் தண்ணீர் தடாகத்தில் அமர்ந்து கொண்டு நமக்கு தண்ணீர்
கொடுத்து கொண்டிருப்பார்கள். "யார் ஹவ்லுல் கவ்சரில் நாயகத்தின் புனித கரத்தால் தண்ணீர் பருகுகிராரோ
அவருக்கு சுவர்க்கம் செல்லும் வரை தாகமே எடுக்காது என்று நாயகம்
சொல்லியிருக்கிறார்கள்".அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தருவானாக!ஆமீண்.
"அப்போது
பெருமானாரிடத்தில் தண்ணீர் வாங்கி பருக சிலர்கள் வரும் பொது மலக்குகள் அவர்களை
தடுத்து நிறுத்துவார்கள் இதை பார்த்த நாயகம் ஏன் அவர்களை தடுக்கின்றீர்கள் அவர்களும் என்
உம்மதுதானே என்று கேட்க! நாயகமே உங்களின் மறைவுக்கு பிறகு நீங்கள் சொல்லாததை
எல்லாம் மார்க்கம் என்று அமல் செய்தார்கள் இஸ்லாத்தின் தூய வடிவை மாற்றி
விட்டார்கள் இவர்களுக்குமா தண்ணீர் கொடுக்க போகிறீர்கள் என்று மலக்குமார்கள்
சொல்லுவார்கள்.இதை கேட்ட நாயகம் தன் முகத்தை திருப்பி கொண்டு தூரமாக செல்லுங்கள்
என்று நாயகம் துரத்தி விடுவார்கள்" என்று ஒரு ஹதீஸில் வருகிறது இப்படிப்பட்ட
மூட பழக்கங்களால்,
அனாச்சாரங்களால்
நாயகத்தின் புனித கரத்தினால் ஹவ்லுல் கவ்சரில்தண்ணீர் குடிக்கும் பாக்கியம்
இல்லாமல் ஆகிவிடும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீண்!
படித்தவர்களெல்லாம் மிக
வேகமாக நம் மார்க்கத்தை ஏற்று
கொள்கிறார்கள். மூட நம்பிக்கை இல்லாத மார்க்கம் அறிவியலுக்கு ஒப்பான மார்க்கம்
இயற்கையான மார்க்கம் என்று பல காரணங்களை சொல்லி உலகின் பல கோடிகளிலிருந்து மக்கள்
கூட்டம் கூட்டமாக சுவர்கத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சுவர்கத்திக்காக படைக்க பட்ட நாம் மூட
நம்பிக்கைகளில் மூழ்கியிருப்பது மிகப்பெரும் கொடுமை.
ஒரு கதை சொல்லுவார்கள்
அரசன் காலையில் எழுந்ததும் முதலில் வண்ணானை பார்த்திருக்கிறார் சிறிது நேரத்தில்
அரசனின் காலில் அடி பட்டு விட்டது.உடனிருந்த மந்திரி ஒருவர் நீங்கள் காலையில் யார்
முகத்தை முதலில் பார்த்தீர்கள் என்று கேட்க அரசர் எதார்த்தமாக வண்ணானின் முகத்தை
என்று சொல்ல உடனே மந்திரி அவன் தான் ராசியில்லாதவன் அவன் முகத்தை முதலில்
பார்த்ததால்
தான் உங்களுக்கு அடிபட்டுவிட்டது என்று கோர்த்து விட்டான் மந்திரிக்கு வண்ணான்
மீது என்ன கோபமோ தெரியவில்லை. உடனே அரசர் என் ஆட்சியில் ராசி இல்லாதவன் இருக்கவே
கூடாது என்று வண்ணானுக்கு தூக்கு தண்டனை விதித்தார் வண்ணான் இதை கேட்டதும்
சிரித்தான். உடனே அரசர் ஏனடா சிரிக்கிறாய் என்று கேட்டார். நீங்கள் என்னை முதலில்
பார்த்ததால் உங்களின் காலில் சிறிது காயம் ஏற்பட்டது நான் உங்களை முதலில் பார்த்ததால் என்
உயிருக்கே பெருத்த அபாயம் ஏற்பட்டுவிட்டதே! என்று வண்ணான் சொல்ல மூட நம்பிக்கையில்
தூங்கிய அரசர் விழித்து கொண்டார் என்று கதை சொல்வார்கள்.
ஆனால்
இன்று இதை நம்மில் சிலரின் வாழ்கையில் எதார்த்தமாக பார்க்கலாம். சட்டை சின்னதாகி
விட்டது, கல்தடுக்கி கீழே
விழுந்து விட்டேன்,
முள் குத்திவிட்டது
என்று எப்போதுமே பிறரின் மீது பழி போட்டு பழகிய மனிதன் எதாவது தவறு நிகழ்ந்து விட்டால் நேரத்தின்
மீதும் காலத்தின் மீதும் பழி போடுகிறான்.
அதேபோல ஜோஷியம்
பார்ப்பவர்கள் சற்று யோசிக்க வேண்டும்.அவன் எதிர் காலத்தை முன்னேற்ற பாதைக்கு
கொண்டு செல்ல தெரியாதவனிடத்தில் நம் முன்னேட்டத்திற்கான யோசனையை கேட்கிறோம். அவன்
வருமானத்தை பெருகி கொள்ள தெரியாதவனிடத்தில் நம் வருமானத்தை பெருக்க ஜோஷியம் பார்க்கிறோமே! உண்மையிலேயே அவனுக்கு
வருமானத்தை பெருக்குவதற்கோ,அல்லது
வாழ்கையில் முன்னேறுவதற்கோ தெரிந்திருந்தால் அவன் செல்வந்தனாக ஆகியிருக்க வேண்டுமே!
ஏன்? ஒரு கூண்டில் கிளியை
அடைத்து கொண்டு தெருத்தெருவாக சுற்ற வேண்டும் நாம் யோசிக்க வேண்டாமா?
இன்னும் சிலர்கள்
காலத்திற்கு ஏற்ற வாறு பெயரை மாற்றி அஸ்ட்றாலஜி என்று வைத்து கொண்டு நாங்கள் கிளி
ஜோஷியம் பார்பதில்லை அது ஹராம் அஸ்ட்றாலஜி தான் பார்க்கிறோம் என்று சொல்லி அவர்களை அவர்களே ஏமாற்றி
கொள்கிறார்கள்.
ஜோஷியத்தை பற்றி நாயகம்
மிக வன்மையாக கண்டித்தார்கள் "யார் குறி சொல்பவனின் சொல்லை கேட்டு கொண்டு ஒரு
செயலை விட்டு விடுகிறானோ அவன் குஃப்ர் வைத்து விட்டான்" என்று சொன்னார்கள்.
இப்படி கடுமையான சொல்லை
பெருமானார் சொல்லி இருக்க நம்மில் சிலர் சுப காரியங்களுக்காக, வியாபாரம் துவங்க யாரின் பேச்சுகளை கேட்கிறோம்
என்று எண்ணி பார்க்க வேண்டும்.
அதே போல வாஸ்து
பார்ப்பது இதுவும் பெரும் பாவம்.
பெருமானாரும் அவர்களின்
தோழர்களும் இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் மிக கவனமாக
இருந்திருக்கிறார்கள்.
பெருமானார் இந்த
பூமியில் கால் பதித்ததே இருளை நீக்கி இந்த பூமியை ஒளிமயமாக்க. அசத்தியத்தை அழித்து
சத்தியத்தை நிலை நாட்டத்தான். பெருமானார் வருவதற்கு முன்பாக அந்த அரேபிய
தீபகற்பத்திற்கு பெயரே மடையர்கள் வாழும் பகுதி என்று தான் இருந்தது. எப்போது
பெருமானார் இந்த கண்ணியமான தீனுல் இஸ்லாமை அறிமுக படுத்திய பிறகு தான் அவர்கள் அறிவுஜீவிகளாக
மாறினார்கள்.
ஹழ்ரத் ஜாபர் (ரலி)அவர்கள்
அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி இடத்தில் ஆற்றிய உரையில் நாங்கள் மடையர்களாக இருந்தோம் எங்களை நேர்வழி
படுத்தியது பெருமானார் தான் என்று சொல்லுவார்கள்.அதே போல ஹுனைன் யுத்தத்தின்
கனீமத் பொருள்களை நாயகம் முஹாஜிரீன் களுக்கு மட்டும் கொடுத்து விட்டு
அன்சாரிகளுக்கு கொடுக்காத பொது சில வாலிபர்கள் நாயகத்தை தவறாக சொன்னார்கள் அப்போது
நாயகம் மூத்த அன்சாரி தோழர்களை அழைத்து
பேசும்போது அவர்கள் நாங்கள் அறியாமையில் மூழ்கி நரகிற்கு செல்ல இருந்தோம்
எங்களுக்கு தீனுல்
இஸ்லாமை கொடுத்து
சொர்க்கவாதிகளாக மாற்றினீர்கள் என்று சொன்ன செய்தி நம்மை யோசிக்க வைக்கிறது.
பெருமானாரின் மகனார்
ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி)அவ்ர்கள் வஃபாதை யொட்டி சூரியகிரகணம் ஏற்பட்டதை மக்கள்
தவறாக பேசிய போது உடனே நாயகம் அதை தெளிவு படுத்தினார்கள்.
நம் மார்க்கத்தில் எந்த
வித மூட பழக்கத்திற்கும் இடமே இல்லை எம்பதை நாம் திட்டமாக எண்ணி கொள்ளவேண்டும்.
அடுத்து சபர் மாதத்தை
பீடை என்று சொல்வது நாம் அந்த மாதத்தை குறை சொல்ல வில்லை நம் அல்லாஹ்வை குறை
சொல்கிறோம்.
இந்த கண்ணியமான
மாதத்தில் தான் அன்னை ஜைனப் (ரலி)அவர்களை பெருமானாருக்கு அல்லாஹ் திருமணம் செய்து
வைத்தான்.
நம் நாயகம் தன் மகளார்
அன்னை பாத்திமா(ரலி)அவர்களை ஹழ்ரத் அலி (ரலி)அவர்களுக்கு திருமணம் முடித்துவைத்த
மாதமும் இந்த சபர் மாதம் தான். எனவே இந்த மாதத்தின் கண்ணியம் தெரியாமல் தவறாக
பேசக் கூடாது. அதே போல கைபர்
வெற்றியும் இந்த சபர் மாதத்தில் தான் கிடைத்தது எனவே தான் வெற்றி தந்த சபர் என்று அழைக்க படும்.யார்
இந்த மாதத்தை பீடை என்று சொல்வானோ அவன் தான் பீடை பிடித்தவன் என்று பொருள்.
அடுத்து இந்த மாதத்தின்
இறுதியில் ஒடுக்கத்து புதன் வரயிருக்கிறது அன்று புல்லை மிதித்தால் புண்ணியம்
என்றும் மண்ணை மிதித்தால் மாண்பு
என்றும் கருதி புல்லையும்
மண்ணையும் மிதிப்பது நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்று அப்படி செய்வது குற்றமாகும்.
உதாரணமாக குர்ஆண் ஓதுவது
மிக சிறந்த அமல் அதை தொழுகையில் ஓதுவது இன்னும் சிறப்பு ஆனால் தொழுகையில் ருக்குவிலும் சுஜுதிலும் குர்ஆண் ஓதினால்!
எனவே இந்த
குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள பெருமானாரின் சுன்னத் களை முழுமையாக பின்பற்ற வேண்டும். எங்கு
நாயகத்தின் சுன்னத் இருக்குமோ அங்கு மூட நம்பிக்கைகள் இருக்காது
மூட நம்பிக்கைகளை விட்டு விட்டு சுன்னத்களை முழுமையாக
பின் பற்றுவோம் நம் அனைவரையும் அல்லாஹ் சுவர்கத்தில் ஒன்று சேர்ப்பானாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்கவும் தொய்வில்லாமல் தொடரவும் துஆ செய்கிறேன்.