Thursday, 4 June 2015

குர்ஆனும் குழந்தைகளும்

                                    بسم الله الرحمن الرحيم 


 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும் அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் காவல் இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.(66:6)

இது நம் பிள்ளைகளின் விடுமுறை காலம்.  
தமிழகத்தில் ஏப்ரல் 20 தேதி யிக்குள் அதிகப்படியான பள்ளிக்கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு விடும் இந்த காலங்களை பயன் படுத்திக்கொண்டு நம் பிள்ளைகளை நம் மார்க்கத்தோடும், குர்ஆனோடும் இணைத்து அவர்களை வருங்கால தீனின் பாதுகாவலர்களாக உருவாக்கவேண்டும். 

அல்லாஹ் உலகில் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் மிக சிறந்தது குழந்தை செல்வம்.
நமக்கு வழங்கிய உடல் ஆற்றல்,கல்வி,பணம்,பதவி,பட்டம் இவை அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் தான் ஆனால் இவை அனைத்தை விடவும் நம் குழந்தை செல்வங்கள் மிக சிறந்த அருட்கொடை.

குழந்தைகள் நம் உள்ளத்தின் கண்கள். அவர்கள் தான் நமக்கு இருவுலக வெற்றியை தேடித்தருபவர்கள்.எனவே அவர்களை நாம் பொக்கிஷமாக கருத வேண்டும்.

குர்ஆனிலே அல்லாஹ் சொல்கிறான் 
                      
                         الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்(18:46)

இவ்வுலகில் நமக்கு மன நிம்மதியை தரக்கூடியயவர்கள் நம் குழந்தைகள் தான்.

எனவேதான் எல்லா நபிமார்களும் சொத்து சுகங்களை கேட்காமல் ஸலிஹான பிள்ளைகளுக்காக துஆ கேட்டதாக குர்ஆனிலே பதிவாகியிருக்கிறது.

ஹழ்ரத் இப்ராஹிம் (அலை) ஹழ்ரத் ஜகரிய்யா (அலை) போன்ற நபிமார்கள் தனக்கு ஸலிஹான பிள்ளைகள் வேண்டி கேட்ட அற்புதமான துஆக்களை பல ஆயிரம் ஆண்டுகள்கழிந்த பிறகும் குர்ஆன் தனக்குள் பதித்து வைத்திருக்கிறது.

எனவே நம் பிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குவதற்கு இதுவே நல்ல தருணம் இந்த விடுமுறை காலங்களை பயன் படுத்திக்கொண்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த  மார்க்க விஷயங்களை முழுமையாக போதிக்க முயற்சி செய்ய வேண்டும்.

   

ஸாலிஹான பிள்ளைகளை பெற்றெடுக்க மார்க்கம் சொல்லும் வழிகள் என்ன

ஒருவர் தன் மனைவியோடு வீடுகூட நாடினால்! அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு ஆரம்பம் செய்கிறேன் யாஅல்லாஹ் ஷைத்தானை எங்களை விட்டு தூரமாக்குவாயாக நீ எங்களுக்கு சன்மானமாக அழிக்கும் எங்கள் மக்களை விட்டும் ஷைத்தானை தூரமாக்குவயாக என்று கணவன் மனைவி இருவருமே ஓதினால் அந்த பரம்பரைக்கே ஷைத்தானின் தீண்டுதல் இருக்காது என்று பெருமானார் (ஸல்)அவர்கள் சொன்னார்கள் 

நாம் இன்று பிள்ளைகளுக்காக மிகுந்த முயற்சி செய்கிறோம் அவர்களின் எதிகாலம் பற்றிய கனவு நம்மிடத்தில் அதிகம்மாக இருக்கிறது அவர்களை என்ன படிக்கவைப்பது எப்படி பட்ட வேளையில் அமர்த்துவது எப்படி எங்கு நிக்காஹ் செய்து கொடுப்பது பற்றிய சிந்தனை நம்மிடத்தில் அதிகமாக இருக்கிறது ஆனால் அவர்கள் ஸாலிஹான பிள்ளைகளாக வளர்வதற்கு என்ன முயற்சி செய்கிறோம்?என்று எண்ணி பார்க்க வேண்டும்.

பெருமானார் அதற்காக ஆரம்பத்திலிருந்தே முயற்சி செய்ய சொன்னார்கள் வீடுகூடும் போதே துஆ ஒத வேண்டும் பிறகு நம் மனைவி கற்பமாக இருக்கும் போது அதிகமான நல் உபகாரங்களை செய்ய வேண்டும்.

ஹழ்ரத் ஜகரிய்யா (அலை)அவர்கள் தன் மனைவி கற்பமாக இருக்கும் காலமெல்லாம் அதிகமாக நோன்பு வைப்பார்கள், தவ்ராத்தை அதிகமாக ஓதி கொண்டிருப்பார்கள்,நிறைய திக்ருகள்,தான தர்மங்கள் நல் உபகாரங்கள் அதிகமாக செய்வார்கள். 

நாம் இன்று இது போன்ற காரியங்களை விட்டு மிக தூரமாக இருக்கிறோம் நம் மனைவி கற்பமாக இருக்கும் போது அதிகமாக குர்ஆன் ஒத வேண்டும் அதிகமாக நற்காரியங்களை செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகு செய்ய வேண்டியவை!

1.வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் சொல்ல வேண்டும். உலகின் நச்சு ஒலிகள் நம் பிள்ளைகளின் காதுகளில் விழுவதற்கு முன் அல்லாஹ்வின் சங்க நாணம் நம் பிள்ளைகளின் காதுகளில் விழ வேண்டும் இந்த செயலை ஆண்கள்,பெண்கள் யார்வேண்டுமானாலும் செய்யாலாம்.

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் யாருக்காவது குழந்தை பிறந்ததை செவியுற்றால் முதலில் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லிவிட்டு தாயை பற்றியும் குழந்தையை பற்றியும் நலம் விசாரித்து விட்டு குழந்தை அருகில் இருந்தால் அதன் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் சொல்லுவார்கள்.என்று ஹதீஸில் பதிவாகியிருக்கிறது.         

2.தஹ்நீக் செய்ய வேண்டும். பெருமானாரின் காலத்தில் பிறந்த குழந்தைகளின் வாயில் பட்ட முதல் உணவு பெருமானாரின் எச்சில் தான்.

ஹழ்ரத் அஸ்மா (ரலி)அவர்களின் மகன் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் பிறந்த போது தன் வாயில் பேரித்தம் பலத்தை வைத்து அதை நன்றாக சவைத்து ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி) வாயில் வைத்தார்கள் என்று ஹழ்ரத் அஸ்மா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே குழந்தைக்கு பெயர் வைக்கும் நேரத்தில் பேரித்தம் பலம் அல்லது தேன் போன்றவற்றை குழந்தையின் வாயில் அப்படியே வைக்காமல் நல்லொழுக்க முல்ல சாலிஹான மனிதர்களின் வாயில் வைத்து சவைத்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

3.
நம் குழந்தை சாலிஹான குழந்தையாக ஆகுவதற்கு நல்ல மக்களை அழைத்து விருந்து கொடுத்து துஆ செய்ய சொல்வது.  

இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் சொல்லும் செய்தி ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்களுக்கு இயாஸ் என்று ஒரு குழந்தை பிறந்த போது ஊரிலுள்ள சாலிஹான மக்களை அழைத்து விருந்து அளித்தார்கள் பிறகு அந்த சாலிஹான மக்கள் துஆ செய்தார்கள் அதேபோல தன் பிள்ளைக்காக ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்கள் துஆ செய்தார்கள் அந்த துஆக்களின் பிரதிபலனை என் குழந்தையிடத்தில் நான் பார்த்தேன் என்று ஹழ்ரத் முஆவியா (ரலி)அவர்கள் சொல்லும் செய்தியை இமாம் புஹாரி (ரஹ்)அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

4.
அகீகா கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் அல்லாஹ்விடத்தில் அதன் அகீகாவின் மீது அடமானமாக உள்ளது. நீங்கள் அகீகாவை கொடுத்து அதை மீட்டு கொள்ளுங்கள் என்று பெருமானார் சொன்ன்னார்கள். ஆண்குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும் பெண்குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும்.

5.
குழந்தையின் தலை முடியை களைந்து அதன் இடையளவு தங்கம் அல்லது வெள்ளி நாணயத்தை தர்மம் செய்ய வேண்டும்.

6.
குழந்தைகளுக்கு நல்ல அழகான அர்த்தமுள்ள பெயர்களை வைக்கவேண்டும்.நாளை மஹ்ஷரில் உங்கள் தந்தைகளின் பெயர்களோடு உங்கள் பெயரை இணைத்துதான் உங்களை அழைக்க படும் எனவே அழகான பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு வையுங்கள்  என்று பெருமானார் சொன்ன்னார்கள்.

ஹழ்ரத் தல்ஹா (ரலி)அவர்களுக்கு பிறந்த 8 பிள்ளைகளுக்கும் நபிமார்களின் பெயர்களை வைத்தார்கள். 

ஹழ்ரத் ஜுபைர் (ரலி)அவர்கள் தனக்கு பிறந்த 9 பிள்ளைகளுக்கும் ஷுஹதாக்களின்  பெயர்களை வைத்தார்கள்.  

பெயர்களின் பிரதிபலன் நம் பிள்ளைகளின் மீது ஏற்படும் எனவே மாடன் என்று அசிங்கமான பெயர்களை வைக்காமல் நல்ல பெயர்களை வைக்க வேண்டும்.

7.
ஆன் குழந்தைகளுக்கு கத்னா (சுன்னத்)விடுவது.

முத்தப உஸ்சுன்னாஹ் என்று பெயர் பெற்ற ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)அவர்கள் தன் மகனார் சாளிமுக்கு கத்னா (சுன்னத்) விடும் போது சாலிஹானவர்களை அழைத்து விருந்து போட்டதாக இமாம் பஹாரி (ரஹ்)அவர்கள் அதபுல் முக்ரதில் பதிவு செய்திருக்கிறார்கள்.

குழந்தை பிறந்த ஏழாவது நாள் குழந்தையின் தலைமுடியை களைந்துவிட்டுகுழந்தை அழகான பெயர்வைத்து, அகீகா கொடுத்து, கத்னா செய்ய வேண்டும்.

மார்க்கம் இவை அனைத்தையுமே நமக்கு சொல்லிகொடுத்ருக்கிறது ஆனால் இவைகளை விட்டு விட்டு மார்க்கம் சொல்லி தராத விஷயங்களை நம் விட்டிலுள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று நாம் குற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம். 

அடுத்து குழந்தைகள் பெரியவர்களாக ஆனா பிறகு அவர்களின் மீது அன்பு காட்டவேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்கள் எல்லா குழந்தைகளின் மீதும் அன்போடு இருப்பார்கள்.

ஒரு முறை பெருமானார் (ஸல்)அவர்கள் குதுபா உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போது தன் இல்லத்திலிருந்து ஹழ்ரத் ஹசன் (ரலி)அவர்கள் தவழ்ந்து கொண்டு பள்ளிவாசலுக்குள் வந்ததை பார்த்த நாயகம் குதுபா உரையை நிறுத்தி மிம்பரை விட்டு கீழே இரங்கி சென்று தன்னுடைய பேரனார் ஹழ்ரத் ஹசன் (ரலி)அவர்களை தூக்கி முத்தமிட்டு கொண்டே குதுபா உரை நிகழ்த்தினார்கள்.

பெருமானாரும் குழந்தைகளின் மீது அன்போடு இருப்பார்கள் சத்திய சஹாபாக்களையும்அன்போடு இருக்க சொன்னார்கள்.அன்பு காட்டாதவர்களை நாயகம் திட்டியும் இருக்கிறார்கள்.

அடுத்து குழந்தைகளுக்காக நாம் அதிகம் துஆ செய்ய வேண்டும்.பெற்றோர்களுக்காக பிள்ளைகள் துஆ துஆ செய்ய வேண்டுமென்று குர்ஆனில் ஒரு இடத்தில் தான் வந்திருக்கிறது ஆனால் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் துஆ செய்வது பற்றி ஏராளமாக வருகிறது.

பெருமானார் ஹழ்ரத் இப்னு அப்பாஸ், ஹழ்ரத் அனஸ், ஹழ்ரத் உஸாமா (ரலி) போன்ற சஹாபாக்களுக்கு துஆ செய்திருக்கிறார்கள். 

நம்பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை சீராக அமைய நம் துஆ அவர்களுக்கு மிக மிக அவசியம் மக்களிடத்தில் சொல்லி புலம்பவதை விட அல்லாஹ்விடத்தில் சொல்லி அழுவது நம்பிள்ளைகளின் வாழ்க்கை பாதையை மாற்றிவிடும்.

உலகம் அறிந்த மாமேதை இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் போன்ற மாகான்கள் நமக்கு போக்கிஷம்மாக கிடைத்தது அவர்கள் அன்னையின் துஆ வின் மூலம் தான் என்பது நாம் அறிந்த விஷயம். 

பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் துஆவிற்கு அல்லாஹ்விடத்தில் தடையில்லை என்று நாயகம் சொன்னார்கள் 

எனவே நம் பிள்ளைகளுக்காக நம் அதிகம் துஆ செய்ய வேண்டும்.

அடுத்து மிகமுக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் நம் இல்லத்தில் இஸ்லாமிய சூழல் ஏற்படுத்த வேண்டும்


நாம் வீட்டினுள் நுழையும் போது சலாம் சொல்லி நுழைய வேண்டும் அது நம் இல்லத்திற்கு பரக்கத்தை ஏற்படுத்தும் என்று பெருமானார் சொன்னார்கள். 

அதே போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் குர்ஆணை அதிகம் ஒத வேண்டும், நம் பிள்ளைகளுக்கு மார்கத்தை பற்றிய விஷயங்களை சொல்லி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் . அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டும் பெருமானாரின் மீது எப்படி பாசம் வைக்க வேண்டும் போன்ற விஷயகளை அவர்களுக்கு சொல்லிகொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.


அடுத்து குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்ற தாழ்வு  காட்டக்கூடாது.

ஒரு சபையில் ஒரு சஹாபி தன் மகனை முத்தமிட்டு மடியில் அமர வைத்ததையும் மகளை முத்தமிடாமல் கீழே அமர வைத்ததையும் பார்த்த நாயகம் மிக கடினமாக அந்த சஹாபியை திட்டினார்கள் என்பது நமக்கு தெரிந்த சம்பவம்தான்.

எனவே நம்பிள்ளைகளுக்கு  மத்தியில் ஏற்ற தாழ்வு காட்ட கூடாது.

அடுத்து நம் பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளர்க்க வேண்டும்.அதற்கு அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரவேண்டும்.

அல்லாஹ்குர்ஆணிலே  நமக்கு எச்சரிக்கை செய்கிறான்.

                    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا  


முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நரகநெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.(66:6)

இந்த வசனத்தின் கருத்து படி நாம் நம் பிள்ளைகளுக்கு சரியான ஒழுக்கத்தை கற்று தராவிட்டால் மறுமையில் அது  நமக்கு பெரும் நஷ்டமாகிவிடும் என்பதை உணர்த்துகிறது. 

பெருமானாரோடு சிறு வயதில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் கை தட்டில் அங்குமிங்கும் சுற்றிதிரிந்ததை பார்த்த நாயகம் மகனே சாப்பிடுவதற்கு முன் பிஸ்மில்லாஹ் சொல்லிக்கொள், வலது கையால் சாப்பிடு, உனக்கு அருகாமையில் உள்ளதை எடுத்து சாப்பிடு என்று ஒழுக்கத்தை கற்று கொடுத்தார்கள்.

இன்னொரு சந்தர்பத்தில் நாயகம் மிக பாசமாக இருந்த தன் பேரர் ஹழ்ரத் ஹசன் (ரலி)அவர்கள் சதகாவின் பேரித்தம் பலத்தை எடுத்து வாயில் போட்டதை பார்த்த நாயகம் மகனே துப்பிவிடு நாம் சதகாவின் பொருள்களை சாப்பிடக்கூடாது என்று சொல்லி கொடுத்தார்கள்.

சிறு பிள்ளைகளுக்கு நாம் போதிக்கும் ஒழுக்கங்கள் அவர்களின் பிற்காலத்து வாழ்கையை சீராக்கிவிடும்.

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று தருவது அவர்களுக்கு நாம் செய்யும்  எல்லா உபகாரங்களை விட மிக மேலானது என்று நாயகம் சொன்னார்கள்.

ஹழ்ரத் லுக்மானுல் ஹகீம் அவர்கள் தன் மகனுக்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 

      وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ


இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும் (31:13)


  يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக, நன்மையை ஏவி, தீமையை விட்டும் மனிதர்களை விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

ஹழ்ரத் லுக்மானுல் ஹகீம் அவர்கள் தன் மகனுக்கு செய்த மிக அற்புதமான உபதேசங்கள் தான் இவை பல வருடங்கள் ஆனாலும் அழியா வேதத்தில் அல்லாஹ் பதித்து விட்டான். எனவே நல்லொழுக்கத்தை நம் பிள்ளைகளுக்கு கற்று தரவேண்டும்.



இறுதியாக நம் பிள்ளை செல்வங்களை அல்லாஹ் நமக்கு தந்த குர்ஆணோடு இணைக்க வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு குர்ஆணை மட்டும் கற்று கொடுத்து விட்டால் அவர்கள் தான் உலகின் அரசர்கள்.

பெருமானார் சஹாபாக்களை குர்ஆனோடு இணைத்தார்கள் அதன் பிரதிபலன் சஹாபாக்கள்  வறுமையில் வாடியபோதும் சரி உலகின் அரசர்களாக மாறிய போதும் சரி அவர்களை போன்ற தூய்மையானவர்கள் உலகில் யாருமே இல்லை என்று அல்லாஹ்வும் ரஸூலும் சான்று பகர்ந்தார்கள் இன்று வரை உலகம் அப்படிப்பட்ட மனதர்களுக்காக ஏங்குகிறது.

சஹாபாக்கள் குர்ஆனை வைத்து கொண்டு உலகை ஆண்டார்கள் குர்ஆன் அவர்களை வழிநடத்தியது ஆனால் இன்று நம் இஸ்லாமியர்கள் குர்ஆனில்லாமல் இந்தியாவின் உயர் பதவியில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்களாக அல்ல இந்தியர்களாக என்ன ஒரு வித்தியாசம்! அவர்களிடத்தில் குர்ஆன் இருந்தது உலகின் எத்தகைய பதவியை அடைந்த போதும் ஈமானோடு வாழ்ந்தார்கள் நம்மிடத்தில் குர்ஆன் இல்லை அதன் மூலம் உலகினுடையா பதவிகளையும் பட்டங்களையும் பார்த்தவுடன் ஈமானை இழந்து  இந்தியர்களாக வாழ்கிறோம்.

இந்த  நிலையை நாம் மாற்ற வேண்டும் நம் பிள்ளை செல்வங்களுக்கு குர்ஆனை கற்று கொடுத்து இந்தியாவினுடைய உயர் பதவியில் அமர்த்த வேண்டும் இந்தியாவின் உயர் அதிகாரிகளாக நம் பிள்ளைகளை ஆக்க வேண்டும். அப்படி குர்ஆனை கற்று கொடுத்து அவர்களை இந்தியாவின் ஜனாதிபதிகலாகவோ அல்லது இந்தியாவின் உயர் அதிகாரிகளாகவோ ஆக்கினால் நம் இந்திய திரு நாடு நம் பிள்ளைகளின் மூலம் மிக நீதமாக ஆட்சி செய்யப்படும் எல்லா வித அநீதங்களை விட்டும் நம் நாடு காக்கப்படும். வெள்ளையர்களை அழித்தவர்கள் நம் முன்னோர்களான முஸ்லிம்கள் என்பது எப்படி சத்தியமோ அதேபோல் நம் அருமை செல்வங்கள் இந்த நாட்டை விட்டு இப்போதுள்ள கொள்ளையர்களை துரத்தும் காலம் வேகுதுரமல்ல இதற்க்கு நாம் செய்ய வேண்டிய தலையாய கடமை நம் பிள்ளைகளுக்கு குர்ஆணை கற்று கொடுக்க வேண்டும்.

அதற்க்கு இந்த கோடை காலத்தை பயன் படுத்தி கொண்டு எங்கெல்லாம் கோடை கால வகுப்புகள் நடக்கிறதோ அங்கு நம் பிள்ளைகளை சேர்த்து விட்டு நம் பிள்ளைகளுக்கு மார்க்க விஷயங்களை கற்று தர முயற்சிக்க வேண்டும். வீணான விளையாட்டுகளில் காலத்தை கழித்து விடாமல் வருங்கால இந்தியாவை ஆளும் உண்மை இஸ்லாமியர்களாக மாற்ற வேண்டும் அல்லாஹ் அருள் புரிவானாக அமீன் 


No comments:

Post a Comment